Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சிவகங்கை: கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில், 5வது கட்டமாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சி பணிகள் 2 வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தொல்லியத்துறை கண்காணிப்பாளர்கள் 3 பேரின் கீழ், அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அகழாய்வு பணிகளை காண, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் கீழடியில் குவிந்தனர். அகழாய்வு பணிகள் குறித்து மக்களுக்கு தொல்லியல்துறையினர் விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்நிலையில் கீழடியில் நடைபெற்று வரும் ஆராய்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.